திருவட்டார் மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் .பி.என்.ஸ்ரீதர், செய்தியாளர்களுடன் ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

திருவட்டார் மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் .பி.என்.ஸ்ரீதர், செய்தியாளர்களுடன் ஆய்வு.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் .பி.என்.ஸ்ரீதர், செய்தியாளர்களுடன் ஆய்வு.


கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்.ஸ்ரீதர்,  திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் பேச்சிப்பாறை ஊராட்சி மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் மாங்கோடு மற்றும் புலியூர் சாலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:- திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பில் ரூ.10.40 இலட்சம் மதிப்பில் மறு சீரமைக்கப்பட்டு வரும் கட்டட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு பணிகளை விரைந்து முடித்து குடியிருப்பு பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மேலும், மணியங்குழியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021 - 22 இன் கீழ் ரூ.11.97 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப் பணிகளை ஆய்வு மேற்கண்டார்கள். அதனைத்தொடர்ந்து மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.60 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுய உதவி குழு கட்டிட பணிகளை ஆய்வு மேற்கொண்டதோடு பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


தொடர்ந்து சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2022 -23-ன்கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒர்கிங் சென்டர் கட்டிட பணிகளை ஆய்வு மேற்கொண்டதோடு கட்டுமான பணிகளின் தரத்தினை உறுதி செய்திட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாங்கோடு ஊராட்சி பகுதியில் பிரதான் மந்திரி கிராம சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.69 கோடி மதிப்பில் வெள்ளாடிச்சிப்பாறை ஓடவள்ளி முதல் நெட்டா வரை - 2,400 மீட்டர் நீளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையை பார்வையிட்டதோடு சாலையின் தரத்தினை ஆய்வு செய்யப்பட்டது. 


மேலும், புலியூர்ச்சாலை ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ௫.23.57 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்.ஸ்ரீதர்,  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


நடைபெற்ற ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு .ஊராட்சி மன்ற தலைவர்கள். உதவி செயற்பொறியாளர்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/