பள்ளிக்கல்வித்துறையை கண்டித்து ஸ்ரீமுஷ்ணம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 9 செப்டம்பர், 2023

பள்ளிக்கல்வித்துறையை கண்டித்து ஸ்ரீமுஷ்ணம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்.

 கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே நாச்சியார்பேட்டையில் தமிழக அரசை கண்டித்து ஸ்ரீமுஷ்ணம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார்ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆசிரியர்கள் சார்பில் கண்டன கோஷங்கள் வைக்கப்பட்டது. 

அதில் பி.எட். பயிற்சி மாணவர்களை கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டத்தை ஆய்வு செய்யும் பணியை கைவிட வேண்டும். மற்றும் நிலுவையில் உள்ள வழங்கப்பட வேண்டிய பணபலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும், மேலும் ஆசிரியர்கள்  மூலம் வட்டார கல்வி அலுவலகத்தை ஆய்வு செய்யும் அனுமதி கொடுக்க வேண்டும், திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ராஜன் வ. தலைவர் தலைமை ஏற்க அந்தோணிராஜ் வ. செயலாளர் வரவேற்புரையாற்ற, சீனிவாசன், சகாயராஜ், ஆரோக்கியராஜ் சின்னப்பன் ரவிச்சந்திரன், விஜயலட்சுமி ம.செ. உறுப்பினர், ஆக்னஸ் இவர்கள் போராட்ட உரையாற்ற ஆரோக்கிய சுந்தர்ராஜ் வ.பொருளாளர்  நன்றியுரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/