ஆழ்வார்திருநகரி ஸ்ரீ ரெங்கநாதர் சன்னதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை கருடசேவை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம் 10 மணிக்கு சகஸ்ர கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது 11,30 மணிக்கு அலங்காரம் செய்து நாலாயிர திவ்யப்பிரபந்தம் சாத்துமுறை. 12.30 மணிக்கு தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு சாயரட்சை. 7 மணிக்கு சுவாமி ஸ்ரீ ரெங்கநாதர் கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு 8 மணிக்கு கோவிலில் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுவாமி இறங்கிய பின் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக