பெரியகுளம் நகராட்சி சின்ன ராஜா பூங்கா அருகே ஆபத்தான முறையில் திறந்தநிலையில் உள்ள மின்சார சுவிட்ச் பாக்ஸ்: மாற்றி அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு உயிர் சேதத்தை தவிர்த்திட வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 செப்டம்பர், 2023

பெரியகுளம் நகராட்சி சின்ன ராஜா பூங்கா அருகே ஆபத்தான முறையில் திறந்தநிலையில் உள்ள மின்சார சுவிட்ச் பாக்ஸ்: மாற்றி அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு உயிர் சேதத்தை தவிர்த்திட வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கை.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுளம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சி சின்னராஜ் சிறுவர் பூங்கா செயல்பட்டு வருகின்றது. இப்பூங்காவிற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் விளையாடி மகிழ்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 


இப்பூங்கா அருகே மழலையர் பயிலும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பூங்காவின் அருகே H 1563, (SS/XXXI, WI) எனும் எண் கொண்ட சர்வீஸ் பாக்ஸ்  தரை தளத்திலிருந்து இரண்டடி மட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பூங்காவிற்கு வரும் சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்படும் வகையில் திறந்த நிலையில் ஆபத்தினை உண்டாக்கும் விதத்தில் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அருகே உயரழுத்த மின்சார டிரான்ஸ்பார்மர் செயல்பட்டு வருகின்றது. 


தரை மட்டத்திலிருந்து இரண்டடி உயரத்தில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய வகையில் திறந்தநிலையில்  இருந்து வரும் மின்சார சர்வீஸ் ஸ்விட்ச் பாக்ஸை மாற்றி அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் சிறுவர்களின் உயிரை காத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/