சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. பிறந்த நாள் விழா; எம்.எல்.ஏ. அசோகன், வ.உ.சி. சிலைக்கு மாலையணிவித்து மரியாதை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. பிறந்த நாள் விழா; எம்.எல்.ஏ. அசோகன், வ.உ.சி. சிலைக்கு மாலையணிவித்து மரியாதை.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 152வது பிறந்த நாள் விழா தமிழகம் முழவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகாசியில், காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

சிவகாசி தொகுதி காங்கிரஸ் எம்.ல்.ஏ. அசோகன் தலைமையில், வ.உ.சி. உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். எம்.எல்.ஏ. அசோகன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


சோழவந்தானில் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனார் 152 வது பிறந்தநாள் விழா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ,குருவித்துறை இந்து வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் சரவணகுமார் தலைமையில், சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனார் 152 வது நாள் பிறந்த நாள் விழாவையொட்டி, சோழவந்தான் மாரியம்மன் கோவில் முன்பாக உள்ள அவரது முழு நீள திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 

இதில், செயலாளர்கள் சதீஷ், மாரி, பொருளாளர் சுரேஷ்குமார், துணை பொருளாளர் கணேச மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் விக்கி, ராஜா, நாகவேல், கோபால், டாக்டர் பிள்ளை ராசு, அஜித், தினேஷ் ,மாணிக்கம் மற்றும் குருவித்துறை இந்து வெள்ளாளர் உறவின்முறை முன்னேற்ற சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, காலையில் குருவித்துறையில், வ. உ .சிதம்பரனார் திருவுருவ படத்திற்கு தலைவர் சரவணகுமார் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/