விழுப்புரம் அருகே தந்தை பெரியார் நகர் கிருஷ்ணா சதுக்கத்தில் உள்ள தாய் மூகாம்பிகை கோவிலில் திருப்பணிகள் நடந்து, கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேக விழா 2ம் தேதி காலை 7:00 மணிக்கு கணபதி, லட்சுமி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, நவக்கிரக ஹோமங்கள், தனபூஜை, கோ பூஜையும் நடந்தது. இரவு 8:00 மணிக்கு முதல்கால யாகசாலை பிரவேசம், யாக பூஜையும், 108 திரவிய ஹோமங்களும் நடந்தது. இரவு 9:00 மகா தீபாராதனை நடந்தது.
தொடந்து, நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், ஹோமங்களும் நடந்தது. காலை 10:00 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 10:30 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஞானபிரகாசம், நடராஜன், மோகனகுமார், கிருபாகரன் உள்ளிட்ட விழா குழுவினர், தந்தை பெரியார் நகர் பொது மக்கள் கும்பாபிஷேக பணிகளை மேற்கொண்டனர். இரவு 7:30 மணிக்கு உற்சவர் தாய் மூகாம்பிகை அம்மன் வீதியுலா நடந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக