திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைபேர் கிராமத்தில் பஸ்திக் சம்பர்க் அபியான் நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைபேர் கிராமத்தில் பஸ்திக் சம்பர்க் அபியான் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைபேர் கிராமத்தில் மாவட்ட துணைத் தலைவரும் கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளருமான ஜெ.ரவி தலைமையில் பஸ்திக் சம்பர்க் அபியான் நிகழ்ச்சி நடைபெற்றது. 


இதில் கண்ணிகைபேர் கிராமத்தில் உள்ள பாஜக நிர்வாகி தளபதிசெல்வா அவர்கள் இல்லத்திற்கு மாநிலத் துணைத் தலைவரும் மாவட்ட பொறுப்பாளருமான எம்.சக்கரவர்த்தி மற்றும் அரசு தொடர்பு துறை மாநில செயலாளர் பாலாஜி ஆகியோர் வருகை தந்து செல்வா அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து உரையாடினார். அப்போது முன்னாள் மாவட்ட தலைவர் ராஜா, எல்லாபுரம் ஒன்றிய தலைவர்கள் முனுசாமி, ஜெகதீஸ்வரன்,  பூண்டி ஒன்றிய தலைவர் சாந்தி, ஒன்றிய பொதுச் செயலாளர்கள் மருது முத்து, சரவணன், மாவட்ட விவசாய அணி தலைவர் சரத்குமார், மாவட்ட பட்டியல் அணி தலைவர் வேலன், முன்னாள் நிர்வாகிகள் சிதம்பரலிங்கம், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கிளை அணி மற்றும் பிரிவுகளின் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/