ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட எதிரி கைது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட எதிரி கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தின் மூலம் ரூபாய் 50,000/- முன்பணம் கட்டினால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாகவும், மாதம் ரூபாய் 15,000/-சம்பளம் தருவதாகவும் கூறி நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் ஏமாற்றி ரூபாய் 15 லட்சத்துக்கும் மேலாக பண மோசடியில் ஈடுபட்ட  எதிரி கைது - மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை.


தூத்துக்குடி இராஜபாளையம் பகுதியை சேர்ந்த மைக்கேல் அண்டோ ஜீனியஸ் என்பவரது மனைவி மரிய சில்வியா (27) என்பவரிடம், தூத்துக்குடி இன்னாசியர்புரம் பகுதியில் உள்ள நீம் பவுண்டேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் லூயிஸ் ராஜ்குமார் (42) மற்றும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அவரது மனைவி கவிதா (32) ஆகியோர் கடந்த 2022ம் ஆண்டு அறிமுகமாகி, மேற்படி மரிய சில்வியாவிடம், தாங்கள் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதியோடு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களை கண்டறிந்து பயிற்சி கொடுக்க ஆசிரியர்களை நியமித்து வருவதாகவும், தங்கள் நிறுவனத்தின் மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி செய்ய ரூபாய் 50,000/- முன்பணம் செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு முன்பணம் செலுத்தினால் மாதம் தோறும் ரூபாய் 15,000/- சம்பளம் தருவதாகவும், 15 ஆண்டுகள் வேலை செய்யலாம் என்றும், அரசு வேலை கிடைத்து சென்றாலோ அல்லது இடையில் வேலையை விட்டு நின்றுவிட்டாலோ முன்பணத்தை திருப்பித் தந்து விடுவதாக ஆசை வார்த்தைகள் கூறி, நம்பிக்கை ஏற்படுத்தி  மேற்படி மரிய சில்வியாவிடம் அவரது வங்கி கணக்கிலிருந்து நீம் பவுண்டேஷன் வங்கி கணக்கிற்கு G.Pay மூலம் ரூபாய் 50,000/- பெற்றுக்கொண்டு, அரசின் எவ்வித வழிகாட்டு முறைகளும் இல்லாமல், முறைகேடாக சிலுவைப்பட்டி, பகுதியிலுள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக நியமித்து, ஒப்புக்கொண்டபடி மாதம் தோறும் கொடுப்பதாக கூறிய ஊதியத்தை 4 மாதங்களாக வழங்காமலும், செலுத்திய முன்தொகையை திருப்பி தராமலும் நம்பிக்கை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்த மேற்படி மரிய சில்வியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டம் புகார் அளித்துள்ளார்.


இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் மாவட்ட குற்ற பிரிவு உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி மற்றும் தலைமை காவலர் வேல்ராஜா ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, மேற்படி எதிரி லூயிஸ் ராஜ்குமாரை கைது செய்தனர்.
 

மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மேற்படி லூயிஸ் ராஜ்குமார் மற்றும் மனைவி கவிதா ஆகிய 2 பேரும் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் முன்பணமாக ரூபாய் 50,000/- வீதம் பெற்றுக் கொண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியமர்த்தி ஒப்புக்கொண்டபடி சம்பளம் வழங்காமலும், முன் தொகையை திருப்பி தராமலும் ஏமாற்றி சுமார் ரூபாய் 15,00,000/-க்கும் மேலாக முறைகேடாக பெற்று நம்பிக்கை மோசடி செய்துள்ளது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/