சிவகங்கை மாவட்டம் மானாமதுரையின் புதிய நகராட்சி ஆணையர் பொறுப்பேற்றுக் கொண்டார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையின் புதிய நகராட்சி ஆணையர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையின் புதிய நகராட்சி ஆணையர் பொறுப்பேற்றுக் கொண்டார்.



சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி ஆணையர் பொறுப்பு காலியாக இருந்து வந்த நிலையில் ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் திரு கண்ணன் கூடுதல் பொறுப்பாக மானாமதுரை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த நிலையில், கூடுதல் பணி சுமை காரணமாக புதிய ஆணையர் நியமிக்கப்பட வேண்டியும், நிர்வாக நலனை கருத்தில் கொண்டும், திருவண்ணாமலை நகராட்சியில் மேலாளராக பணியாற்றி வந்த திருமதி ரங்கநாயகி அவர்கள் பதவி உயர்வு பெற்று மானாமதுரையின் புதிய நகராட்சி ஆணையராக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்டார்.



இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நகராட்சி ஆணையருக்கு மரியாதை நிமித்தமாக அலுவலக ஊழியர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/