இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், 86 லட்சத்து, 37 ஆயிரம் ரூபாய் உண்டியல் காணிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், 86 லட்சத்து, 37 ஆயிரம் ரூபாய் உண்டியல் காணிக்கை.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது, பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில்.  இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். பக்தர்கள் கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணத்தை எண்ணும் பணிகள் கோவில் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. 


இதில் கோவிலில் உள்ள உண்டியல்கள் மூலம் 86 லட்சத்து, 37 ஆயிரத்து, 70 ரூபாய் பணமாக கிடைத்தது. மேலும் 225 கிராம் தங்கமும், 1 கிலோ, 330 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக கிடைத்திருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/