கன்னியாகுமரி, செப்.18- நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று கொட்டாரம் ராமர் கோயிலில் சிறப்பு நடத்தப்பட்டு,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கொட்டாரம் பேரூர் பா.ஜ.க தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார்.மாவட்ட இளைஞரணி செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ் ,பா.ஜ.க கவுன்சிலர் தங்க குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஒன்றிய பொறுப்பாளர் சுபாஷ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.இதில் பா.ஜ.க நிர்வாகிகள் செந்தில்,சபரி ,முத்துக்குமார்,கோகிலவள்ளி,குலசேகரன் ,விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் செய்தியாளர் என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக