கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தில் அம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் சுந்தரமூர்த்தி த/பெ அஞ்சாப்புளி 55 வயது முதியோர் பழைய கொள்ளிடம் ஆற்றில் மதியம் இரண்டு மணி அளவில் கால்நடை குளிப்பாட்டும் பொழுது முதலை அவரை கடித்து இழுத்து சென்றுள்ளது
உடனே அதைப் பார்த்த கிராம பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக குமராட்சி தீயணைப்பு நிலையம் தீயணைப்பு அதிகாரி முரளி தலைமையிலான தீயணைப்பு குழுவினர் விரைந்து வந்து அவரை தேடி சடலமாக மீட்டு கிராம அலுவலர் பக்கீர் முகமது இடம் ஒப்படைத்தனர் இதனால் அந்த கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்
சிதம்பரம் செய்தியாளர் P ஜெகதீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக