நெமிலியில் மக்கள் தேசம் கட்சியில் 50 -க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம் பனப்பாக்கம் மக்கள் தேசம் கட்சியின் மாநில துணை செயலாளர். கோ. விமல்குமார் அவர்கள் முன்னிலையில் ராணிப்பேட்டை இளைஞர் அணி இரா.மே.பசுபதி, விஜய் அவர்கள் தலைமையில் நெமிலி, கறியாகுடல், அசநெல்லிகுப்பம், உத்திரம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள மாற்று கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி மக்கள் தேசம் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர். குமரேசன், அகவலம். செல்வா ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக