வெண்டைக்காயின் விலை வீழ்ச்சியின் காரணமாக 5 டன் அளவிலான வெண்டைக்காயை ஏரியில் வீசிய வியாபாரி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

வெண்டைக்காயின் விலை வீழ்ச்சியின் காரணமாக 5 டன் அளவிலான வெண்டைக்காயை ஏரியில் வீசிய வியாபாரி.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மாணவள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் ரமேஷ் இவர் திருப்பத்தூர் மாவட்டத்தை சுற்றியுள்ள வெண்டைக்காய் விவசாயிகளிடம் வெண்டைக்காயை வாங்கி சென்னை, பெங்களூர், கேரளா, உள்ளிட்ட மார்க்கெட்களில் வெண்டைக்காய் விற்பனை தொழில் செய்து வருகிறார்.


இந்த நிலையில் சில வாரங்களாக வெண்டைக்காயின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக விவசாயிகளிடம் வாங்கப்பட்ட வெண்டைக்காயை கந்திலி அருகே உள்ள கள்ளேரி ஏரியில் சுமார் ஐந்து டன் அளவிலான வெண்டக்கையை ஏரியில் வீசினார்.


மேலும் இதுகுறித்து ரமேஷ் தெரிவிக்கையில் தற்போது வெண்டைக்காயின் விலை மிகவும் குறைந்துள்ளதால் எந்த மார்க்கெட்டிலும் வெண்டைக்காயை விற்க முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் வியாபாரிகள் விவசாயிகளிடம் தற்போது வெண்டைக்காய் விலை வீழ்ச்சி காரணமாக வெண்டைக்காயை வாங்காமல் போனால் அடுத்த முறை பயிரிடும் எந்த ஒரு காய்கறிகளையும் வியாபாரிகளுக்கு கொடுக்க மாட்டார்கள் தற்போது வெண்டைக்காய் விலை வீழ்ச்சி தெரிந்தும் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ வெண்டைக்காய் இரண்டு ரூபாய் என வாங்கி எங்களால் விற்க முடியாது சூழ்நிலை ஏற்பட்டதால் இதனை ஏரியில் வீசி செல்கிறோம் எனவும் தெரிவித்தார்.


இதன் காரணமாக எனக்கு மட்டும் ஒரு லட்ச ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவும் ஆதங்கம் தெரிவித்தார்.

- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/