தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் அருகே ரவுடி உட்பட 4 பேர் கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் அருகே ரவுடி உட்பட 4 பேர் கைது.


தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி உட்பட 4 பேர் கைது.


முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் முள்ளக்காடு ராஜிவ் நகரை சேர்ந்த சின்னத்தம்பி மகன் கருப்பசாமி (36) என்பவர் கடந்த 10.09.2023 அன்று தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் முகேஷ் (20) மற்றும் மாரியப்பன் மகன் பாலா (19) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர். இதுகுறித்து மேற்படி கருப்பசாமி சத்தம் போட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த முகேஷ் மற்றும் பாலா அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் ஆனந்தராஜ் (22) மற்றும் தாளமுத்துநகர், கணபதி நகரை சேர்ந்த கல்யாணி மகன் அருண் (20) ஆகியோருடன் சேர்ந்து கருப்பசாமியிடம் தகராறு செய்து அவரை,  கழுத்தை நெறித்து தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுகுறித்து கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து மேற்படி எதிரிகளான முகேஷ், பாலா, ஆனந்தராஜ் மற்றும் அருண் ஆகிய 4 பேரையும் கைது செய்தார். மேலும் இது குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி முகேஷ் மீது ஏற்கனவே முத்தையாபுரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/