கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் அவதார ஸ்தலம் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுக்கு 36 வது ஆராதனை விழாவை முன்னிட்டு சென்ற மாதம் 31ஆம் தேதி வியாழக்கிழமை பூர்வ ஆராதனை நடைபெற்று ஆராதனை விழா தொடங்கியது.
இதனையடுத்து நேற்று 01-09-2023 வெள்ளிக்கிழமை புண்ணிய தின ஆராதனை விழா நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பக்தர்கள் பங்கேற்று தாங்கள் கொண்டு வந்த பல்வேறு மலர்களால், அர்ச்சனையும், பூஜைப் பொருட்களால் அலங்கரித்தும் பல்வேறு மந்திரங்கள் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிறைவாக ஸ்ரீ ராகவேந்திரருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
மேலும் 02.09.2023 சனிக்கிழமையான இன்று உத்ர ஆராதனையுடன் விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக