நெமிலி அருகே எலத்தூர் ஊராட்சியில் ரூ.32,00,000/- மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 செப்டம்பர், 2023

நெமிலி அருகே எலத்தூர் ஊராட்சியில் ரூ.32,00,000/- மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை.

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எலத்தூர் ஊராட்சியில், 2023 -2024 அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.32,00,000/-  (முப்பத்திரண்டு லட்சம்) மதிப்பீட்டில், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை எலத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சோபனா வினோத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர், பெ.வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் நெமிலி ஒன்றிய துணைப் பெருந்தலைவர், ச.தீனதயாளன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கங்காதரன், புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/