கோவில்பட்டியில் வழிப்பறி ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 3 பவுன் தங்க செயின் மற்றும் ரொக்கபணம் ரூபாய் 10,000/- மீட்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

கோவில்பட்டியில் வழிப்பறி ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 3 பவுன் தங்க செயின் மற்றும் ரொக்கபணம் ரூபாய் 10,000/- மீட்பு.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து செல்போன், தங்க நகையை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற எதிரி கைது - ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 3 பவுன் தங்க செயின் மற்றும் ரொக்கபணம் ரூபாய் 10,000/-  மீட்பு.

கோவில்பட்டி படர்ந்தபுளி, தோணுகால் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் அய்யனார் (28) என்பவர் கடந்த 10.06.2023 அன்று தனது இருசக்கர வாகனத்தில் வேலாயுதபுரம் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது, அங்கு வந்த 16 வயது சிறுவர் ஒருவர் இவரிடம் லிப்ட் கேட்டுள்ளார். மேற்படி அய்யனாரும் சிறுவரை ஏற்றிக்கொண்டு கோவில்பட்டி மூப்பன்பட்டி பகுதியில் உள்ள பாலம் அருகில் இறக்கி விட்டுள்ளார். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் சிலர் மேற்படி சிறுவனுடன் சேர்ந்து கொண்டு அய்யனாரிடம் தகராறு செய்து அவரிடமிருந்த 3 பவுன் தங்கசெயின் மற்றும் பணத்தை பறித்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து மேற்படி அய்யனார் கடந்த 13.06.2023 அன்று அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் காந்தி விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி தபால் தந்தி காலனியைச் சேர்ந்த மாடசாமி மகன் மகாராஜா (24) என்பவர் மேற்படி அய்யனாரிடம் தங்க நகை பறிப்பில் ஈடுபட்டதும், தற்போது மேற்படி மகாராஜா விருதுநகர் மாவட்டம் எம். புதுப்பட்டி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட சிறையில் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து  மேற்படி போலீசார் கடந்த 08.09.2023 அன்று விருதுநகர் மாவட்ட சிறைச்சாலைக்கு சென்று சம்பிரதாய கைது செய்து, கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் I நீதித்துறை நடுவர் அவர்களின் உத்தரவுப்படி காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணை மேற்கொண்டு, அவரிடமிருந்த ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 3 பவுன் தங்கசெயின் மற்றும் ரொக்கபணம் 10,000/-யும் பறிமுதல் செய்தனர். மீண்டும் மேற்படி மகாராஜாவை நேற்று (09.09.2023) கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருதுநகர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/