வீடு புகுந்து 20 பவுன் நகை-பணம் கொள்ளை; நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 செப்டம்பர், 2023

வீடு புகுந்து 20 பவுன் நகை-பணம் கொள்ளை; நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படையை அடுத்துள்ள சுவாமி மல்லம்பட்டியை சேர்ந்தவர் பரசுராமன்(74), ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவரது மனைவி ஞானம்மாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரசுராமன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் சம்பவத்தன்று வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.17 ஆயிரம் ரொக்கம் திருடிக்கொண்டு தப்பினர். 


வீடு திரும்பிய பரசுராமன் பீரோவில் இருந்த நகை-பணம் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபு ணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். திருமங்கலம் ராஜாநகரை சேர்ந்தவர் கணேஷ்குமார். 


இவரது மோட்டார் சைக்கிளை சம்பவத்தன்று மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/