விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே விழுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பில் புரட்சி பாரத கட்சியின் சார்பாக செப்டம்பர் இரண்டில் மாவீரர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு புரட்சி பாரத கட்சி நிறுவனர் எம் மூர்த்தியார் உருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் சேலை மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார் மாவட்ட மூர்த்தியார் பெயர் துணைச் செயலாளர் செல்வராஜ் வரவேற்பு அளித்தார் மேலும் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தவர்கள் மாவட்ட மூ.பே. துணைத் தலைவர் வெங்கடேசன் கோலியனூர் ஒன்றிய தலைவர் சுதாகர் விக்கிரவாண்டி ஒன்றிய தலைவர் கோபிநாதன் விழுப்புரம் ஒன்றிய தலைவர் ஜெய் பீம் கமல் வளவனூர் நகர தலைவர் தீபக்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் கூடுதல் தெற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பூவை ஆர் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தி விழா சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் குருவிழி மனோகரன் மகேஷ் அலெக்ஸ் மாறன் சுரேஷ் அருள் சுதாகர் பாண்டியன் அசோக் குமார் உள்ளிட்ட பலர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக