தூத்துக்குடி செல்போன் பறிப்பு - 2 பேர் கைது, 10,000/- மதிப்புள்ள செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

தூத்துக்குடி செல்போன் பறிப்பு - 2 பேர் கைது, 10,000/- மதிப்புள்ள செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்

தூத்துக்குடி, தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது - ரூபாய் 10,000/- மதிப்புள்ள செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.


தூத்துக்குடி சிலுவைபட்டி தாய் நகரைச் சேர்ந்த ஜோன்ஸ் மகன் செல்வம் (37) என்பவர் கடந்த 05.09.2023 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொட்டை கோபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் மேற்படி செல்வத்தை கத்தியால் தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர், இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில், தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பிரேம் ஆனந்த் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில்குமார், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி மற்றும் தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி தாளமுத்துநகர் லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த மல்லி (எ) மாலைராஜா மகன் சந்தனராஜ் (20), தாளமுத்துநகர், நேருநகரைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் இசக்கிராஜா (19) மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர் ஆகியோர் சேர்ந்து மேற்படி செல்வத்தை கத்தியால் தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது.


உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரிகளான சந்தனராஜ் மற்றும் இசக்கிராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தும், மேற்படி இளஞ்சிறாரை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 10,000/- மதிப்புள்ள செல்போன் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/