தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் விழா
தந்தை பெரியார் அவர்களின் 145- ஆவது பிறந்தநாளான "சமூக நீதி நாளை" முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் உடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக