நெமிலியில் தந்தை பெரியார் அவர்களின் 145 -வது பிறந்தநாள் விழா! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

நெமிலியில் தந்தை பெரியார் அவர்களின் 145 -வது பிறந்தநாள் விழா!

நெமிலியில் தந்தை பெரியார் அவர்களின் 145 -வது பிறந்தநாள் விழா! 


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் தந்தை பெரியார் அவர்களின் 145 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாணாவரம் முதல் சேந்தமங்கலம் சாலையில் கீழ்வீதி பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு அவர்கள்  கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் திராவிடர் விடுதலைக் கழக, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர். திலீபன், நிர்வாகிகள். நரேந்திரன், அன்பு, இந்துமதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெமிலி நகர துணை செயலாளர். திருநாவுக்கரசு உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். 

செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/