உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ 10 கோடி அறிவித்த அயோத்தி சாமியார் பரமஹம்ஸ் ஆச்சாரியா வை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! உள்துறை செயலாளருக்கு தமிழ்நாடுகாங்கிரஸ் கமிட்டி மாநில பொது குழு உறுப்பினர் ஜெமினி எம்.என். ராதா புகார் மனு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ 10 கோடி அறிவித்த அயோத்தி சாமியார் பரமஹம்ஸ் ஆச்சாரியா வை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! உள்துறை செயலாளருக்கு தமிழ்நாடுகாங்கிரஸ் கமிட்டி மாநில பொது குழு உறுப்பினர் ஜெமினி எம்.என். ராதா புகார் மனு.

.சானதானம் குறித்து கருத்து கூறிய அமைச்சர் உதயாநிதி ஸ்டாலினை தனது கைகளால் கொள்வேன் என்று கூறிய அயோத்தி துறவி  பரமஹம்ஸ் ஆச்சாரியாவை கைது செய்ய கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம் .என். ராதா தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் க்கு புகார் மனு ஒன்று அனுப்பி உள்ளார்

 
அந்த  மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை தேனாம்பேட்டை  காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கும் போது பேசிய கருத்துக்களை திரித்தும் சிதைத்தும் ஆர்.எஸ்.எஸ், பாஜக பரிவாரம் விஷமப் பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த பரமஹம்ஸ் ஆச்சாரியா  சனாதனம் குறித்து கருத்து கூறிய உதயநிதி ஒரு அரக்கன் அவரது தலையை கொண்டு வருவோருக்கு 10 கோடி ரூபாய் பரிசளிப்பேன். யாரும் கொல்லாத பட்சத்தில் என்னுடைய கைகளாலேயே அவரை கொள்வேன் இதற்காக என்னுடைய கத்தியை தயார் செய்துள்ளேன். என்று கருத்து கூறியுள்ளார்

இக்கருத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அமைச்சர் உதயாநிதி ஸ்டாலினை கொலை செய்வேன் என்று கூறிய அயோத்தி பரமஹம்ஸ் ஆச்சாரியா மீது உடனடியாக வழக்கு பதிந்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அந்த  மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவில் நகல் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (டி.ஜி.பி) சங்கர்ஜிவால் மற்றும் கடலூர் மாவட்ட போலீஸ்  சூப்பிரண்ட் . இரா.ராஜாராம் ஆகியோருக்கு அனுப்பி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/