தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், பள்ளி கல்வி துறையால் நடத்தப்படும் வட்டார அளவிலான சதுரங்க(செஸ்) விளையாட்டுப் போட்டிகள் மெய்ஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. அந்த போட்டிகளில் சாத்தான்குளம் TNDTA RMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான மாணவிகள் பிரிவில் B. அழகு பேச்சி பூரணி 7B முதல் இடமும், 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மாணவிகள் பிரிவில் R. மிஸ்பா நான்சி 12A முதல் இடமும் மாணவர்களுக்கான பிரிவில் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் C.ஆதிநாராயணன் இரண்டாம் இடமும், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் B. சரவணன் 12B மூன்றாம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் டேவிட் வேதராஜ், தலைமையாசிரியர் D. ஜெபசிங் மனுவேல் ஆகியோர் வாழ்த்தி பாராட்டி பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக