தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் 77- வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் திரு. மணிவாசகம் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர்.சரவணவேல், நரம்பியல் சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர். காமேஷ் அருண் , மேலாளர்கள், ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வளமையான பாரதம் உருவாக்க துணையாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும், 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மருத்துவமனையில் 77 சதவீத சலுகையில் மூத்தகுடிமக்களுக்கு சிறப்பு உடற்பரிசோதனை 15 ஆகஸ்ட் முதல் 19 வரை நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக