வடலூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மகளிர் திட்ட நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் நடத்திய மாபெரும் சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் தலைமையில்
வடலூர் வள்ளலார் குருகுலம்
மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது
நிகழ்வில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள்
தேர்தெடுக்கபட்டுள்ள வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார் பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசுகையில்
கடலூர் மாவட்டம் அதிக கிராம பகுதிகளை கொண்டது, கிராம பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பை பெறுவதன் மூலம் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுவதுடன், வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள் என தெரிவித்தார். இம்மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 449 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐயப்பன், சிந்தனை செல்வன், வேல்முருகன், ராதாகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக