திருவள்ளூர் அடுத்த பெரியபளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த செயல்களுக்கான விருது வழங்கி சிறப்பித்த மதர் தெரசா அறக்கட்டளை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

திருவள்ளூர் அடுத்த பெரியபளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த செயல்களுக்கான விருது வழங்கி சிறப்பித்த மதர் தெரசா அறக்கட்டளை

மதர் தெரசா மாற்றுத்திறனாளிகள் சாதனையாளர் நல வாழ்வு அறக்கட்டளை சார்பாக திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் எம் எஸ் என் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவிற்கு சங்கத்தின் நிறுவனர் தேவி தலைமை தாங்கினார். 


செயலாளர் லட்சுமி வரவேற்பு உரை ஆற்றினார். கடலூர் மாவட்டம் பெத்தாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கு. மஞ்சுளா அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த சிறந்த செயலாற்றிய பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 


நிகழ்ச்சியின் இறுதியில் பொருளாளர் பாரதி நன்றி கூறினார்.விருதுப்பெற்ற மஞ்சுளா வை கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நல சங்கம் சார்பில் பொன்னாடை போர்த்தி வாழ்தினர்



- கடலூர் செய்தியாளர் விஸ்வநாதன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/