தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் தலைமை தாங்கி, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்வில், தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், தாமரைக்குளம் பேரூராட்சி துணை தலைவர் மலர்கொடி சேதுராமன், பணி நியமனக்குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், வார்டு கவுன்சிலர்கள் ஜாகீர்உசேன், வசந்தா, தேவகி, முத்துலட்சுமி,கவிதா, மற்றும் பள்ளி தலைமையாசிரியர் பிரபாகரன், ஆசிரியப் பெருமக்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக