வேலூர் மாவட்டத்தில் பெட்டிக்கடையில் வாலிபரை தாக்கிய அண்ணன்- தம்பி கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

வேலூர் மாவட்டத்தில் பெட்டிக்கடையில் வாலிபரை தாக்கிய அண்ணன்- தம்பி கைது.

பெட்டிக்கடையில் வாலிபரை தாக்கிய அண்ணன்- தம்பி கைது.


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த
கழிஞ்சூரை பகுதியை சேர்ந்தவர் அன்பு இவர் ரயில்வே கேட் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி இரவு 7 மணிக்கு சேனுர் கிராமத்தை சேர்ந்த சாந்தகுமார் (வயது 36), அவருடைய தம்பி சதீஷ்குமார் (34) ஆகியோர் கடைக்கு வந்தனர்.


கடையில் இல்லாதபொருளை கேட்டதால் அன்பு இல்லை என கூறினார். உடனே அவர்கள் இருவரும் தகராறு செய்ததால்
அன்பு கடையை மூடினார்.



இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அன்புவை தாக்கியுள்ளனர். இது குறித்து அன்பு விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ் வழக்குப்பதிவு
செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் காசிக்குட்டைக்கு
செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்த சாந்தகுமார், சதீஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.




காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/