நெமிலி அருகே லஞ்சம் வாங்கிய வி ஏ ஓ, கிராம உதவியாளர் கைது! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

நெமிலி அருகே லஞ்சம் வாங்கிய வி ஏ ஓ, கிராம உதவியாளர் கைது!

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவிற்கு உட்பட்ட செல்வ மந்தை கிராமத்தில் தசரதனின் வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி. ஏ. ஓ ஆர். சதீஷ் (31) (முன்னாள் காவல்துறை அதிகாரி) மற்றும் கிராம உதவியாளர் ராஜலிங்கம்  (37) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி. எஸ். பி. கணேஷ் தலைமையிலான போலீசார் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்கள். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/