நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் இரண்டு காட்டு யானைகள் மோதிக்கொண்டதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பாா்த்து ரசித்தனா். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் இரண்டு காட்டு யானைகள் மோதிக்கொண்டதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பாா்த்து ரசித்தனா்.


கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் இரண்டு காட்டு யானைகள் மோதிக்கொண்டதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பாா்த்து ரசித்தனா். நீலகிரி மாவட்ட வனப் பகுதியில் ஏராளமான வனவிலங்குள் உள்ளன. அவ்வப்போது, உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதி மற்றும் விளைநிலங்களுக்குள் நுழையும் வனவிலங்குள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.


இந்நிலையில், தேவா்சோலை பஜாரை அடுத்துள்ள தனியாா் பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்த இரண்டு காட்டு யானைகள் திடீரென சண்டையிட்டு கொண்டன. இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனா்.


சிலா் விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். அது தற்போது வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/