கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தின்முன்பாக குடிமனை பட்டா கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூர் கிராமத்தில் வசிக்கும் 75 பட்டியல் இன குடும்பங்களுக்கு குடிமனைப் பட்டா கேட்டு விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு புவனகிரி ஒன்றிய செயலாளர் மணி தலைமை தாங்கினார். மேலும் பின்னலூர் கிராமத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட கிராமக்கள் கலந்துகொண்டு அரசு குடிமனைப்பட்டா வழங்க வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனைதொடர்ந்து புவனகிரி வட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மனுவைப் பெற்றகொண்ட புவனகிரி வட்டாட்சியர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தபின் கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக