கும்பகோணம் சிவகாமி நகர் சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

கும்பகோணம் சிவகாமி நகர் சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீர்.

கும்பகோணம் சிவகாமி நகர் சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநகர இளைஞரணித்தலைவர் துரைராஜன்  வலியுறுத்தி செய்தியாளிடம் பேசியதாவது, கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டு சிவகாமி நகர் சாலையில்,பாதாள சாக்கடை குழாயில் அவ்வப்போது அடைப்பு ஏற்படுவதும், அதனை மாநகராட்சி தொழிலாளர்கள் சரிசெய்வதும் வாடிக்கையாகி வருகிறது. அண்மைக்காலமாக கழிவு நீர் செல்லும் பாதாள சாக்கடை மேன்ஹோல் அடைத்து கொண்டுள்ளது. இதனால் சாலை  முழுவதும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து மக்கள் புகாரளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனார்.


இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்வதோடு, தோண்டப்பட்ட குழியையும் உடனடியாக மூட வேண்டும் எனக் கூறினார். சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கைமூடியபடி செல்கின்றனர். இந்த கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் அதிகளவில் செல்லும் பெரிய கடைத்தெரு பகுதியில், வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/