தூத்துக்குடி அடுத்த நாசரேத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் திருவைகுண்டம் அணி வெற்றி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி அடுத்த நாசரேத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் திருவைகுண்டம் அணி வெற்றி.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத், மாதாவனம் பாய்ஸ் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி கடந்த நான்கு நாட்கள் நடந்தது. இப்போட்டியில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் திருவைகுண்டம் அணியும், மாதாவனம் பாய்ஸ் கிளப் அணியும் மோதின. அதில் திருவைகுண்டம் அணி வெற்றி கோப்பையை பெற்று சென்றது. 


பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு நாசரேத் நகர அதிமுக செயலாளர் கிங்ஸ்லி தலைமை வகித்து வெற்றி பெற்ற அணிக்கு வெற்றி கோப்பையை வழங்கினார். இதில் மாதாவனம் சரவணன், துரை, அமல்ராஜ், தங்கராஜ், சங்கர், ஜெபராஜ், முத்துசெல்வன், ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாதாவனம் பாய்ஸ் கிளப் அணியினர் செய்திருந்தனர்.



- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/