மதுரையில் மாலையில் இடி மின்னலுடன் பலத்த மழை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

மதுரையில் மாலையில் இடி மின்னலுடன் பலத்த மழை.

வெப்பச் சலனம் காரணமாக மாலை நேரங்களில் நேற்று முதல் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. நேற்று மதுரை அருகே அவனியாபுரம் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் பலத்த மழை பெய்து, மின்னல் இடியால் பாதிப்பு ஏற்பட்டு, பல மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.


இன்று திங்கள் மாலை, திடீரென கருமேகங்கள் கூடி, இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டத் துவங்கியது. மதுரை பைபாஸ், காளவாசல், விளாங்குடி, செல்லூர் மற்றும் தல்லாகுளம் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் மழை கொட்டி மகிழ்ச்சியையும் குளிர்ச்சியையும் ஏற்படுத்தினாலும், வேலை முடிந்து வீடு திரும்புவோர் குறிப்பாக பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.


மின்சாரமும் தடை செய்யப் பட்டதால், இயல்பு வாழ்க்கையில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. மதுரை அருகே பரவை, விளாங்குடி, சமயநல்லூர், திருமங்கலம், அழகர்கோவில் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
சோழவந்தானில், சாரல் மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில், பல பகுதிகளில் பகல் நேரங்களில் வெய்யிலின் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது. பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் கடும் வெப்பம் நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/