சின்னசேலம் அருகே ஆடல் பாடல் கச்சேரியில் ஆபாச நடனம் இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

சின்னசேலம் அருகே ஆடல் பாடல் கச்சேரியில் ஆபாச நடனம் இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பைத்தந்துறை என்ற கிராமத்தில் கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் கச்சேரி மூலம் ஆபாச நடனம் ஆடியது சம்பந்தமாக இரண்டு பேர் உள்ளிட்ட பலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பைத்தந்துறை என்ற கிராமத்தில் அந்த ஊரில் உள்ள பொன்னியம்மன் கோவிலுக்கு தேர் திருவிழா நடத்தி இரவில் ஆடல் பாடல் கச்சேரி நடைபெற்றது. இந்த ஆடல் பாடல் கச்சேரியின் போது கச்சேரியில் ஆடிய பெண்களும் கச்சேரியை நடத்தியவர்களும் பிறருக்கு தொல்லை தரும் வகையில் ஆபாசமாக நடனமாடிய குற்றத்திற்காக சின்ன சேலம் காவல் நிலைய போலீசார் பைத்தந்துறை கிராமத்தின் ஊர் முக்கியஸ்தரான பிச்சப்பிள்ளை என்பவருடைய மகன் தங்கவேல் என்பவர் மீதும், ஆடல் பாடல் கச்சேரியை நடத்தி வரும் கள்ளக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்த ராஜசேகர் வயது 37 என்பவர் உள்ளிட்ட இந்த கச்சேரியில் உள்ள மேலும் பலரை சேர்த்து சின்ன சேலம் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியில் இது போன்ற கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனங்கள் அரங்கேறி வரும் நிலையில் போலீசார் கட்டுப்பாடுகள் விதித்து எச்சரித்து வரும் வேளையில் கச்சேரியை நடத்துகின்றவர்கள் தொடர்ந்து ஆபாச நடன நிகழ்ச்சியை அரங்கேற்றி வருவதால் போலீசார் தங்களுடைய கடமையை நிறைவேற்ற கச்சேரியை நடத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மேலூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற ஆபாச நடனம் நிகழ்ச்சி தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/