வேலூர் காட்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் (22 வயது) இளம்பெண். இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார்.
இவர் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை. இதுகுறித்து விடுதி காவலாளி கல்லூரி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தேடி உள்ளனர். அவர் கிடைக்காததால் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக