சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி யில் சிறந்த சமூக சேவைக்கான விருது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி யில் சிறந்த சமூக சேவைக்கான விருது.

அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் சித்ரா மற்றும் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள் லெனின் குமார் (தமிழ் துறை ), சந்தோஷ் மற்றும் சிவா (வணிகவியல் துறை), ஜகத் ரட்சகன் மற்றும் வருண் குமார்(வரலாற்றுத் துறை) ஆகியோர் மரம் நடுதல், ரத்த தானம், தூய்மை இந்தியா திட்டம், விழிப்புணர்வு பேரணிகள் என பல்வேறு சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றியமைக்காக இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் சிறந்த சமூக சேவைக்கான விருதை வழங்கிப் பாராட்டினார். 


விருது பெற்ற பேராசிரியரையும் மாணவர்களையும் கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/