திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கலைஞர் அவர்களின் ஐந்தாவது நினைவு நாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய திமுகவினர் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கலைஞர் அவர்களின் ஐந்தாவது நினைவு நாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய திமுகவினர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பஸ் நிலையம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் அலங்கரிக்கப்பட்ட கலைஞர் அவர்களின் உருவப்படத்திற்கு அவரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 


வேடசந்தூர் எம்எல்ஏ காந்தராஜன் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா,எஸ்.டி.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன், வேடசந்தூர் நகரச் செயலாளர் கார்த்திகேயன், வேடசந்தூர் ஒன்றிய குழு தலைவர் சௌடீஸ்வரி கோவிந்தன், வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்விமுருகன், மற்றும் தமிழ்ச்செல்வி ராமச்சந்திரன், எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி கார்த்திகேயன், எரியோடு நகர செயலாளர் சின்னா என்ற செந்தில்குமார், ஒன்றிய பிரதிநிதி மணிமாறன், மாவட்ட பிரதிநிதி டீக்கடை சுப்பிரமணி, தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் ஆரோன், மாவட்ட பிரதிநிதி முத்துகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மறுதபில்லை, மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் காட்டுபாவா சேட்டு, துணை அமைப்பாளர் வின்சென்ட், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செல்வகுமார், பேரூர் மாணவரணி அமைப்பாளர் வண்டி பட்டறை தர்மராஜ், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் ஜெகநாதன், பேரூர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், பேரூர் பொருளாளர் பாஸ்கரன், வேடசந்தூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் வக்கீல் சூர்யா செல்வகுமார், கற்பகம் வேல்முருகன், கீதா, தில்ஷாத்பேகம், யாஸ்மின் ரியாஜியின், மற்றும் ராஜலிங்கம், காஜா, பேவரிட் சண்முகம், செட்டிநாடு கருப்பையா, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இதனை அடுத்து வேடசந்தூர் எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதி அவர்களின் உருவப்படத்திற்கு எம்எல்ஏ காந்தி ராஜன் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதிலும் ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



- தமிழகுரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/