திருப்பூர் தெற்கு எம் எல் ஏ க.செல்வராஜ் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது, இத்திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அவர்கள் கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளையில் அவர் பயின்ற பள்ளியில் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி 45-வது வார்டு, நொய்யல் வீதி அரசு நடுநிலைப் பள்ளியில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமாகிய .க.செல்வராஜ் எம்எல்ஏ., இத்திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார். இந்த நிகழ்ச்சியில் தொமுச மாநில துணைச் செயலாளரும், தெற்கு மாநகர செயலாளருமான டி கே டி மு.நாகராசன் , வடக்கு மாநகர செயலாளர் திருப்பூர் மேயருமாகிய ந. தினேஷ் குமார், மற்றும் மாநில ,மாவட்ட, மாநகர நிர்வாகிகள் ,அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக