நெடுஞ்சாலை துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு பணிகளை பொறியாளர் ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

நெடுஞ்சாலை துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு பணிகளை பொறியாளர் ஆய்வு.

இராணிப்பேட்டை கோட்டம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் (ம) பராமரிப்பில் நடைப்பெற்ற ஒப்பந்த பணிகளை திருவண்ணாமலை வட்டம் நெடுஞ்சாலைத்துறை க (ம) ப கண்காணிப்பு பொறியாளர்  பழனிவேல்  கிருஷ்ணகிரி - இராணிப்பேட்டை சாலை, சோளிங்கர் காவேரிப்பாக்கம் சாலை, கொடைக்கல் சாலை, மணியம்பட்டு சாலை, அம்மூர் - கல்புதுர் சாலை மற்றும் நாமக்குள மோட்டூர் ஆகிய சாலைகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். 


ஆய்வின் போது இராணிப்பேட்டை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் செல்வகுமார், வாலாஜா நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டப் பொறியாளர் பாலாஜி சிங், தரகட்டுப்பாட்டு உதவிக்கோட்டப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் நிதின்  மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவிப்பொறியாளர் செல்வி.நிவேதா, சாலை ஆய்வாளர்கள் தேவேந்திரன் செல்வராஜ், கண்ணண், சீனிவாசன், கிருஷ்ணண் ஆகியோர்கள் ஆய்வின் போது உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/