இரணிப்பேட்டை மாவட்டத்தில் சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

இரணிப்பேட்டை மாவட்டத்தில் சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நீதிமன்ற பணிகள் தொடர்பான பணிகள் சட்ட மேற்கொள்ளவும், ஆலோசனை வழங்கவும் ஆலேசாகர் பதவி தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது .


இந்த சட்டஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 01.09.2023 காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் இராணிப்பேட்டை என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


விண்ணப்பதாரர் தகுதிவாய்ந்த பல்கலைக்கழகம் மூலமாக பி.எல் / அதற்கு நிகரான சட்டம் சம்மந்தப்பட்ட பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகள் உயர்நீதிமன்றம் (அல்லது) நீதிமன்றம் குறித்த பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.  


விண்ணப்பதாரர் தமிழ்நாடு பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். அவர்மீது எவ்வித வழக்குகளும் நிலுவையில் இருக்கக் கூடாது. விண்ணப்பதாரர் ஒப்பந்த அடிப்படைமயில் மாதம் ரூ.20,000/- தொகுப்பூதியம் சம்பளம் அடிப்படையில் பணிபுரிய வேண்டும்.


விண்ணப்பதாரருடைய பணி திருப்தி அளிக்காதபட்சத்தில், காவல் கண்காணிப்பாளர், சம்மந்தப்பட்டவருடைய ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறு ஒருவரை நியமிக்க அதிகாரம் உடையவராவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/