வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூசாரிவலசை, ஆட்டுக்காரன்பட்டி, பக்காசுரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது .
இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி இன்று பரதராமி அருகே சித்தூர் சாலையில் பூசாரி வலசை, ஆட்டுக்காரன்பட்டி, ஆள்நெறி பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முறையாக குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் உறுதி அளித்தனர் இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் இதனால் பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் சிறுது நேரம் காலதாமதமாக சென்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக