தூத்துக்குடி அடுத்த ஸ்ரீவைகுண்டம் - நிலப்பிரச்சனையில் விவசாயி ஒருவர் வெட்டிக் கொலை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி அடுத்த ஸ்ரீவைகுண்டம் - நிலப்பிரச்சனையில் விவசாயி ஒருவர் வெட்டிக் கொலை.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள சிவராமங்கலம் கிராமம் அப்பன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் வைகுண்டராமன் மகன் சொக்கலிங்கம் (70). விவசாயியான இவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த சீனி மகன் பூல்பாண்டி (40) என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சனை இருந்துள்ளது.


இந்நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் வீட்டில் இருந்த சொக்கலிங்கத்தை, பூல்பாண்டி மற்றும் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த மந்திரம் மகன் சுவாமிநாமன் (27) ஆகியோர் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.


இதுகுறித்து தகவல் அறிந்து ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த சுவாமிநாதன், பூல்பாண்டி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


சம்பவ இடத்தை டிஎஸ்பி மாயவன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 3 கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/