சர்வதேச உரிமைகள் கழகம் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

சர்வதேச உரிமைகள் கழகம் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது!

சர்வதேச உரிமைகள் கழகம் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக இந்திய நாட்டின் 77வது சுதந்திர தினத்தை சர்வதேச உரிமைகள் கழகம் நிறுவனதலைவர் Dr. சுரேஷ்கண்ணன் அவர்களின் ஆலோசனைப்படி சர்வதேச உரிமைகள் கழக வழக்கறிஞர் அசோக் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி. தூத்துக்குடி  மாவட்டத்தில் சுதந்திர தின விழா சிறப்பிக்கபட்டது.


தூத்துக்குடி மாவட்ட தலைவர் பிரிசில்லா சர்வதேச உரிமைகள் கழக  தலைமை அலுவலகத்தில் தேசியகொடியை ஏற்றினார். அதன் பின்னர் துணை தலைவர்கள் பாலசுப்ரமணியன், ராமசந்திரன் மற்றும் சதிஷ்  தலைமையிலும் மற்றும் மாவட்ட செயலாளர்கள்  இசக்கிராஜா மற்றும்  தொம்மை நீக்குலஸ் மணி  முன்னிலையிலும் போதை விழிப்புணர்வு நடை பேரணி சர்வதேச உரிமைகள் கழக தலைமை அலுவலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு  குருஸ்பெர்னாந்து சிலை அருகில் முடிவடைந்தது.


நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சாக்லேட் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சர்வதேச உரிமைகள் கழக  அனைத்து அணி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், இணை, துணை, வார்டு செயலாளர்கள் மற்றும் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/