விசிக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

விசிக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்.



ராணிப்பேட்டை மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் வருகின்ற ஆகஸ்ட் 17  ,61வது  பிறந்த நாளை முன்னிட்டு  ராணிப்பேட்டை  மேற்கு மாவட்ட  மாநில, மாவட்ட, நகர,ஒன்றிய,கிளைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார்  மண்டபத்தில் நடைபெற்றது


ஆலோசனைக் கூட்டத்திற்கு  ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் ப.பிரபு என்கிற பிரபாகரன் தலைமை தாங்கினார் மாவட்டத் துணைச் செயலாளர் பாலாஜி மாவட்ட பொருளாளர் சம்பத் மண்டல பொறுப்பாளர்கள் சோ.தமிழ்,வெற்றிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், விசிக கட்சியின்   தலைமை நிலைய  அலுவலக  தனிச்செயலாளர் பாலசிங்கம், திருவள்ளூர் மாவட்ட மண்டல செயலாளர் சித்தாதன்  ஆகியோர்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து  கொண்டு கட்சிப் பொறுப்பாளர்களிடமிருந்து கருத்துக்களை கேட்டு ஆலோசனை வழங்கினர்.



தனிச்செயலாளர் பாலசிங்கம் பேசுவையில் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் மேற்கு மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க வேண்டுமென்றும்  அனைத்து கிளை  முகாம்களிலும் கட்சியின் கொடியை ஏற்ற வேண்டும் என்றார்  மாவட்ட செயலாளர் நேரடியாக அனைத்து கிளைகளுக்கும்  சென்று கொடிகளை ஏற்றி வைக்க முடியாது எனவே இரண்டு முகாம்களுக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்து அவரின் மேற்பார்வையில்  கட்சியின் கொடியை ஏற்றி வைத்து  நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டுமென்று கூறினார்.


மேலும் பேசிய அவர்  வசதி வாய்ப்பற்ற ரிமோட் ஏரியா இரண்டு கிராமங்களை தேர்வு செய்து அந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு, தனியார் பள்ளிகளுக்கு  நிகராக  சிறப்பு வகுப்பறைகளை  ஏற்படுத்தித் தர வேண்டுமென்றும்,கட்சியின் கொள்கை கோட்பாடுகளை மக்களுக்கு எடுத்துக் கூறி அனைத்து சமுதாயத்தினரும் கட்சியில் இணைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று பல்வேறு கருத்துகளை பேசினார்.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/