அலங்காநல்லூரில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

அலங்காநல்லூரில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில், சுதந்திர தின விழாவினை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பாக பெருமாள் கோவில் அருகில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் தேசியக்கொடியை மாவட்டத் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அலங்காநல்லூர் பேருந்து நிலையத்திலும் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.



 முன்னதாக ,பாலமேடு கட்சி அலுவலகத்திலும்  தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், வட்டாரத் தலைவர் காந்திஜி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயமணி, முருகன், மனித உரிமை மாவட்ட தலைவர் சரந்தாங்கி முத்து, முன்னாள் வட்டாரத் தலைவர் மலைக்கனி, நகரத் தலைவர்கள் வைரமணி, சசிகுமார், முருகானந்தம், சந்திரசேகர், நிர்வாகிகள் மலைராஜன், திரவியம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/