தாராபுரத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மலர் அஞ்சலி.. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

தாராபுரத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மலர் அஞ்சலி..

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரியார் திடலில் முத்தமிழ் அறிஞர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர்.கருணாநிதி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு மலரஞ்சலி நடைபெற்றது.

திராவிட கழகம் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தலைமையில்,ஒன்றிய தலைவர் நாத்திக சிதம்பரம்,திராவிடர் தொழிலளர் அணி மாவட்ட பொருளாளர் மணி,ஒன்றிய செயலாளர் முருகன், வழக்கறிஞர் இராமபட்டினம் முருகேசன், விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல்,தமிழ் புலிகள் கட்சி மேற்கு மண்டல துணை செயலாளர் ஒண்டிவீரன், முனைவர் கே.வி.சிவசங்கர் திமுக, நகர்மன்ற உறுப்பினர் ஹைடெக் அன்பழகன், இளமதி மாரிமுத்து, விசிக செய்தி தொடர்பாளர் அருன் சாரதி, விசிக முருகவேல்., விசிக ரகு, தாரை செல்வம், திமுக சுப்பிரமணியன், திமுக ஜெயக்குமார், நாட்டுத்துரை, அபுதாகிர், ரகமதுல்லா மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.


பின்னர் தாராபுரம் அரசு போக்குவரத்துக் கழக திமுக அலுவலகத்தில் வழக்கறிஞர் இராமபட்டினம் முருகேசன் தலைமையில் தந்தை பெரியார் திருவுருவ படம் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/