தமிழக நிருபர்கள் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாநில மாநாடு நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

தமிழக நிருபர்கள் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாநில மாநாடு நடைபெற்றது.


தமிழக நிருபர்கள் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா  மற்றும் மாநில மாநாடு மேட்டூர் தனியார் திருமண மண்டபத்தில், ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு நிருபர்கள் சங்க நிறுவன தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர்  ஜி.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

 

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக, அவிநாசி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம், கிருஷ்ணகிரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகையினை, சென்னை சன் டிவி தலைமை செய்தியாளர், இராம.செல்வராஜ் வழங்கினார். 


இந்த கூட்டத்தில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர், சதாசிவம் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் தேவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் இவர்களுக்கு தேவையான நல உதவிகளை அரசிடம் இருந்து பெற்று தருவதாக உறுதி அளித்தார். மேலும் இந்த மாநாட்டில்,

  1. தாலுக்கா நிருபர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும், 
  2. பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் தாலுகா நிருபர்களையும் சேர்க்க வேண்டும், 
  3. கல்வி வேலைவாய்ப்பில் பத்திரிகையாளர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், 
  4. பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் தமிழக நிருபர்கள் சங்கத்தின் புதிய செய்தி தொடர்பாளராக நரசிம்மகுமார் நியமிக்கப்பட்டார்.

 

இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் திரு செந்தில்குமார், பென்னாகரம் பத்திரிகையாளர் மன்ற தலைவர், ஜீவானந்தம் மற்றும் வினாயகா கல்வி குழுமங்களின் தலைவர் கணேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மேட்டூர் மற்றும் சேலம் பகுதி நிருபர்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/